உருக்கமாக பிரார்த்தியுங்கள்
ஒருவர் தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு தொழில் செய்யச் சென்றார். தன்னால் ஆன பிரயத்தனங்களைச் செய்து பார்த்தார். அவருக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. தன் முயற்சி தோல்வியடைந்ததால் சொந்த நாட்டுக்கே திரும்பி விட முடிவெடுத்தார் அவர். தன் நண்பருக்கு கடிதம் எழுதினார். நண்பரிடமிருந்து பதில் வந்தது.''நண்பரே! முதலில் நீர் தேவனிடம் உமது பணி சிறக்க வேண்டுமென வேண்டிக் கொள்ளும். உமது வேண்டுதலை கண்ணீருடன் செய்யும். உமது உருக்கமான பிரார்த்தனையை கடவுள் நிச்சயம் ஏற்பார்'' என்று எழுதியிருந்தார்.பைபிளில் உள்ள 'நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ள தாயிருக்கிறது' என்ற வசனத்தையும் எழுதியிருந்தார்.அந்த வசனத்தை திரும்பத் திரும்ப படித்த அவர் கண்ணீருடன் இயேசுவிடம் வேண்டினார். கர்த்தர் அதை ஏற்றார். பின் அவரது தொழிலைச் செய்ய ஏராளமானோர் முன் வந்தனர். உருக்கமாக பிரார்த்திக்கும் ஒவ்வொருவரின் ஜெபத்தையும் கர்த்தர் ஏற்கிறார். அதற்குரிய பலனையும் தருகிறார்.