உணர்தல் அவசியம்
UPDATED : ஆக 04, 2023 | ADDED : ஆக 04, 2023
உடம்பை சுத்தம் செய்வதற்கு சோப்பு, சீயக்காய், ஷாம்பு ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். அது போல வயிற்றில் உள்ள கழிவுகளை போக்க பேதிமாத்திரை சாப்பிடுவர். அம்மாத்திரையின் கவரில் 'உள்ளான சுத்திகரிப்பே முதன்மையானது' என அச்சிடப்பட்டிருக்கும். அதைப்பார்த்தால் 'தன்னை தானே உணர்தல் அவசியம்' என்பது தெரியும். அதாவது தன்னை தானே உணரும் ஆன்மாவை சுத்தப்படுத்த ஆண்டவரின் நாமம் தேவை.