உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எம்.அனிதா, ஜனக்புரி, டில்லி. *முன்னேறத் துடிப்பவருக்கு...* விடாமுயற்சி, உழைப்பு, உற்சாகம் இவற்றோடு அனுபவசாலிகளின் யோசனை அவசியம். ம.விசாலாட்சி, வில்லியனுார், புதுச்சேரி.*கோயிலில் திருவிழா நடத்தாவிட்டால் தோஷமா...திருப்பணி நடந்தால் திருவிழா தேவையில்லை. காரணம் இன்றி நிறுத்தினால் தோஷம் வரும். மு.ஆதிரா, அலகுமலை, திருப்பூர்.*புனித நதியில் நீராடாமல் தலையில் மட்டும் தெளிக்கலாமா?நீராட முடியாத போது மட்டும் தெளிக்கலாம். வே.பத்மநாபன், சிவகிரி, தென்காசி.*துலாபாரம் என்றால்... கோயிலில் உள்ள தராசில் அமர்ந்து எடைக்கு எடை அரிசி, பழம், வெல்லம், உப்பு என காணிக்கை செலுத்துவது துலாபாரம். ஆ.சந்தானம், மடிக்கேரி, மைசூரு. *பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டால்...மனநலம், உடல்நலம், தொழில் வளர்ச்சி, திருமண யோகம், குழந்தைப்பேறு கிடைக்கும். ரா.ராதா, மேலுார், மதுரை.*ரதி, மன்மதன் கோயில் எங்குள்ளது?ரதி, மன்மதன் சிலைகள் கோயில் துாண்களில் இருக்கும். திருமணத்தடை விலக இவர்களை வழிபடுங்கள். தே.சிதம்பரநாதன், ஸ்ரீமுஷ்ணம், கடலுார்.*சாத்துக்கை, சாத்துக்கால் என்றால்...ஒரு தெய்வத்தை வேறொரு தெய்வமாக அலங்கரிப்பது சாத்துக்கை, சாத்துக்கால். ஆனால் தெய்வத்தின் முகத்தை மட்டும் மாற்றக் கூடாது.க.அமரன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம். *ஹோமம் செய்தால்...நோய் தீர்வதோடு பாவமும் விலகும். ச.குத்தாலம், குளச்சல், கன்னியாகுமரி.*மாலையில் அரசமரத்தை சுற்றலாமா?மாலை 6:00 மணிக்கு பிறகு சுற்றக் கூடாது. ப.பரமேஸ்வரி, ஆண்டிபட்டி, தேனி.*இரவில் ஜாதகம் பார்க்கலாமா?பகலில் பார்ப்பது நல்லது.