உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

ஆர்.ராஜேஷ், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி.*பொய் பேசாமல் இருக்க என்ன செய்யலாம்?பொய் பேசுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது. இதை உணர்ந்தால் போதும். வி.அருண், தாம்பரம், செங்கல்பட்டு.*பசித்திரு விழித்திரு தனித்திரு - பொருள் என்ன?வயிறு புடைக்க சாப்பிட்டால் அறிவு மங்கும். எனவே அளவாக சாப்பிட்டு பசியுடன் இரு. * ஏழு மணிநேரத்திற்கு மேல் துாங்காமல் விழிப்புடன் செயல்படு. * வீண் பேச்சை தவிர்த்து ஆன்மிகத்தில் ஈடுபடு. எம்.சுவேதா, சுரண்டை, திருநெல்வேலி.*அரைஞாண் கயிறாக பாம்பை விநாயகர் வைத்திருப்பது ஏன்?விஷத்தை (தீமையை) புறக்கணித்து அமுதத்தை (நன்மையை) அளித்துக் காப்பவர் விநாயகர். இதை உணர்த்த பாம்பை ஆபரணமாக வைத்துள்ளார். கே.பாஸ்கரன், கரோல்பாக், டில்லி.*மூன்று தலைமுறையினர் வாழ்ந்த வீட்டில் இருக்கலாமா?பல தலைமுறையினர் வாழ்ந்த வீட்டில் இருப்பது நீங்கள் செய்த புண்ணியம். ஆர்.ராஜி, கன்னிவாடி, திண்டுக்கல்.*அன்னதானம் அளித்த பின்பே சாப்பிட வேண்டும் என்பது ஏன்?பசித்தவருக்கு அன்னம் அளித்தபின் சாப்பிடுவது மேலான தர்மம். இதை யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி' என்கிறார் நாயன்மாரான திருமூலர். வி.பிரபு, ஹலசூரு, பெங்களூரு.*கோடை காலத்தில் குலதெய்வத்திற்கு விழா நடத்துவது ஏன்?கோடைகாலத்தில் விவசாயப்பணி குறைவாக இருக்கும். இதனால்தான் அச்சமயத்தில் குலதெய்வத்திற்கு விழா கொண்டாடுகிறோம். ஆர்.ராஜேஷ், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.*மேற்கு நோக்கிய சிவனை வழிபட்டால்...மேற்கு நோக்கிய சிவனை வழிபடுவது விசேஷம். விஷ ஜுரம், தீராத நோய், கடன்கள் மறையும். பி.கேதார்நாத், அவிநாசி, திருப்பூர்.*தன்னைத் தானே பலியிடும் சிற்பம் தேர்முட்டியில் இருப்பது ஏன்?தேரோட்ட விழாவில் விபத்து நேராமல் இருக்க இச்சிற்பத்தை செதுக்கி உள்ளனர். எம்.கமலம், கொட்டாம்பட்டி, மதுரை.*கையில் ஆறு விரல் இருக்கலாமா?இது இயல்பானதுதான். ஆறு விரல் இருப்பதை யோகம், அதிர்ஷ்டம் என்பர். கே.ராதா, கருங்கல், கன்னியாகுமரி.*எங்கள் வீட்டில் நிறைய பல்லி ஊர்கிறதே... காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள பல்லி சன்னதியில் பிரார்த்தனை செய்யுங்கள்.