உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

*தீபாராதனையின் போது கண்களை மூடி வழிபடலாமா...கே.கேஷிகா, பல்லடம், திருப்பூர்.கண்களைத் திறந்து கடவுளை தரிசித்தபடி வழிபடுங்கள். மனம், புத்தி தெளிவடையும். *வாத நோய்க்கு எந்த கோயிலுக்கு வேண்டிக் கொள்ளலாம்?எஸ்.ரம்யா, சிதம்பரம், கடலுார்.தினமும் மாலையில் விளக்கேற்றி குருவாயூரப்பனை வழிபடுங்கள். *திருமணஞ்சேரி கோயிலில் கொடுத்த பிரார்த்தனை மாலை தொலைந்து விட்டது. என்ன செய்யலாம்?பி.லாவண்யா, கல்யாண்புரி, டில்லி.திருமணஞ்சேரி கோயிலில் சுவாமி, அம்மனுக்கு பூமாலை சாத்தி மீண்டும் அர்ச்சனை செய்யுங்கள். அதை பிரார்த்தனை மாலையாக வைத்துக் கொள்ளுங்கள். *தெய்வீக மாநாடு நடத்துவது ஏன்?பி.ஹரிணி, மடிக்கேரி, மைசூரு.ஆன்மிகவாதிகளின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.*கருவறைக்குள் பக்தர்கள் உழவாரப்பணி செய்யலாமா?எம்.துஷ்யந்த், சின்னமனுார், தேனி.அர்ச்சகர் மூலம் கருவறையை துாய்மைப்படுத்துங்கள். *குழந்தைகளுக்கு எத்தனை முத்து உள்ள கொலுசு அணிவிக்க வேண்டும்?சி.ரித்திகா, கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி.9, 12 என்ற எண்ணிக்கையில் முத்துக்கள் இருந்தால் கிரகதோஷம் விலகும். *எதிரியாகவும், துரோகியாகவும் சிலர் மாறி விடுகிறார்களே....ஆர்.யாமினி, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.சிரித்த முகத்துடன் பழகினால் எதிரி என்பதே இல்லை. பொறாமை உடையவர்கள் தான் துரோகியாக மாறுவார்கள். அவர்களிடம் இருந்து கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். *ராஜதானி என்றால்...ஜி.வைசாலி, பசுமலை, மதுரை.'ராஜ' என்றால் மன்னர். 'தானி' என்றால் இடம். மன்னர் வசிக்கும் இடம் அல்லது தலைநகரம் என்பது இதன் பொருள்.*அர்ச்சாவதாரம் என்றால் என்ன?எல்.சித்தார்த், நாகர்கோவில், கன்னியாகுமரி.'அர்ச்ச' என்றால் 'பூஜை'. கண்ணுக்குத் தெரியாத கடவுளை சிலை வடிவில் வழிபடுவது அர்ச்சாவதாரம்.