உள்ளூர் செய்திகள்

எப்போதும் உண்மை பேசுங்கள்

* பக்தியுடன் இரு. ஆனால் மூடத்தனத்திற்கு இடம் தராதே. * கடவுளை வெளியுலகத்தில் தேடுவது அறியாமை. * கடவுளிடம் சரணடைந்தால் பாவத்தில் இருந்து விடுபடலாம். * பசுவைத் தேடும் கன்றாக கடவுளைக் காண மனம் ஏங்க வேண்டும்.* பக்தி இல்லாமல் புனித யாத்திரை செல்வதில் அர்த்தமில்லை.* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு துணை நிற்கும். * அமைதியாக இருப்பதே ஞானத்தின் அடையாளம். * கடவுளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என யாருமில்லை.* கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது. * ஆணவம் இருக்கும் வரை கடவுளை நாம் நெருங்க முடியாது. * பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் அம்சமே. * எந்த நிலையிலும் கலங்காதவனே உண்மையான ஞானி. * எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே உண்மையையே உணர்த்துகின்றன.* ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கடவுளை அணுகாதே.* முழு நம்பிக்கையுடன் கடவுளின் திருவடியில் சரணடைந்திடு. அறிவுறுத்துகிறார் வள்ளலார்