பிரம்மச்சாரி கூத்து நேர்ச்சை
கேரள மாநிலம் கோட்டயம் அருகிலுள்ள தலம் கிடங்கூர். இங்குள்ள கோயிலில் பிரம்மச்சாரி கோலத்தில் முருகன் இருக்கிறார். குழந்தை வரம் பெற பிரம்மச்சாரி கூத்து என்னும் நிகழ்ச்சியை நேர்ச்சையாக செய்கின்றனர். அடர்ந்த காடாக இருந்த இப்பகுதியில் கவுன மகரிஷி குடில் அமைத்து தங்கியிருந்தார். தரிசனம் பெற வேண்டி பிரம்மச்சாரி கோலத்தில் முருகனை பூஜித்து பலனடைந்தார். அந்த சிலையே இக்கோயிலில் மூலவராக உள்ளது. சன்னதியின் எதிரில் உள்ள கொடி மரத்தின் மீது மயில் வாகனம் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட குறுந்தொட்டி என்னும் மரத்தால் உருவான கூத்தம்பலம் இங்குள்ளது.ராமாயண, மகாபாரத காட்சிகளும், பரத முனிவரின் நடன முத்திரைகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. திருவிழா காலத்தில் கூத்துகள் நடத்தப்படும். முருகனைக் குறித்த 'பிரம்மச்சாரி கூத்து' இதில் பிரசித்தி பெற்றது. வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், தொழில் போட்டியை சமாளிக்கவும், எதிரிகளை அடக்கவும் செவ்வாய், வெள்ளி அன்று இங்குள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு குருதிபூஜை நடக்கிறது.பிரம்மச்சாரி கோலத்தில் முருகன் இருப்பதால் சன்னதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை. கொடிமரத்தின் அருகே நின்று மட்டும் தரிசிக்கலாம். நோய் தீர பஞ்சாமிர்த அபிஷேகம், திருமணத்தடை நீங்க சுயம்வர அர்ச்சனை செய்கின்றனர். நினைத்தது நிறைவேற துலாபாரம் அளித்தும், காவடி சுமந்தும், சுட்டு விளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர். இங்கு பெருமாள், பகவதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. எப்படி செல்வது: கோட்டயம் - பாலா சாலையில் 21 கி.மீ.,விசேஷ நாள்: திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசி பிரம்மோற்ஸவம்நேரம்: அதிகாலை 4:00 - 12:00 மணி;மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04822 -- 254 478, 257 978அருகிலுள்ள கோயில் : வைக்கம் மகாதேவர் கோயில் 35 கி.மீ., (மரணபயம் தீர...)நேரம்: அதிகாலை 4:30 - 11:00 மணி;மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 04829 - 215 812