நமக்கு முதல் கடவுள் தாயும் தந்தையும்
* தாயும் தந்தையும் நமக்கு முதல் கடவுள்.* சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகம் உன் கையில்.* நீரின்றி அமையாது உலகு. நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு.* மிகச்சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது.* மனசாட்சியை புறக்கணிப்பதை விட பெரிய வஞ்சகம் வேறு ஒன்றுமில்லை. * துன்பம் வரும் போதும் மனம் தளராமல் ஊக்கத்துடன் செயல்பட்டால் வெல்வது உறுதி.* இல்லற வாழ்வே நல்லறமாகும். இல்லற வாழ்வை விட்டு விலகுவது சிறந்ததல்ல. * பிறருக்கு கொடுத்து வாழாதவர் பல காலம் வாழ்ந்தாலும் அது அர்த்தமற்றதாகும்.* அளவோடு உண்கிறவர்களுக்கு அழகு நீடிக்கும்.* பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் குழந்தைகள் அமிர்தம் போன்றவர்கள்.* வறுமையிலும் தவறான செயலில் ஈடுபடாதே. * முயற்சி செய்தும் கிடைக்காத பொருளை உடனே மறந்து விடு. * குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு யாருடைய ஆதரவும் கிடைக்காது.* எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் தற்பெருமையாக பேசக்கூடாது.* இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவுக்கு அடித்தளம்.* சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பத்தை தரும்.என்கிறார் அவ்வையார்