தரமற்ற வார்த்தைகளை பேசாதே
UPDATED : நவ 27, 2020 | ADDED : நவ 27, 2020
* தரமற்ற வார்த்தைகளை பேசாமல் இருப்பதே உண்மையான விரதம்.* எல்லா உயிர்களையும் கடவுளாக போற்றுங்கள்.* கடவுள் மீது பக்தி செலுத்துவதை விட ஒழுக்கம் மிக அவசியம்.* உங்கள் உழைப்பிலேயே உண்ணப் பழகுங்கள்.* இனிமையாகப் பேசினால் வாழ்வில் உயர்வு கிடைக்கும்.* எப்போதும் நல்லவரோடு உறவாடுங்கள்.* மூத்தோர்களின் அறிவுரைகள் பெரும் பொக்கிஷம்.* பெற்றோரைக் காப்பது பிள்ளைகளின் கடமை.* தர்மம் செய்வதில் விருப்பம் கொள்ளுங்கள்.* நல்ல செயல்களை முன்னின்று நடத்துங்கள்.* எந்நேரமும் சுறுசுறுப்பாக இருக்க பழகுங்கள்.* இளமைக் காலமே கல்வி கற்க ஏற்ற காலம்.* கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு.* பிறருக்கு கற்றுக் கொடுப்பதே மேலும் கற்பதற்கான வழி.எச்சரிக்கிறார் அவ்வையார்