உள்ளூர் செய்திகள்

இது மட்டுமே கலப்படமற்றது

* உலகில் தாயன்பு போல கலப்படமற்றது வேறேதுவும் இல்லை. * மனைவியை தன் வருமானத்திற்குள் வாழ வைப்பதே கணவருக்கு கவுரவம். * குழந்தையை போல் கபடம் இல்லாமல் வாழப் பழகுங்கள். * கடவுளை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பலன் உண்டு. * பிதுர் காரியங்களுக்கு சிரத்தையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் வேண்டும். * எந்த நிலையில் இருந்தாலும் கடவுளின் குணங்களை கேட்பதை லட்சியமாக கொள்ளுங்கள். * முதலில் வெளியில் அடக்கம் ஏற்பட்டால் தான் மனதில் அடக்கம் ஏற்படும். * வாழ்க்கை என்பது லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. * மற்றவர் துன்பத்தை தீர்க்க நம்மால் ஆனதை செய்ய வேண்டும். * எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருப்பது நல்லது.* மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும்.மனம் திறக்கிறார் காஞ்சி மகாபெரியவர்