மகிழ்ச்சியுடன் இருக்கப் பழகு
* எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கப் பழகு. * அறிவுக்கு வேலை கொடுத்தால் கோபம் வராது. * தியானத்தில் ஈடுபடுபட்டால் அமைதியுடன் வாழலாம். * கடவுள் எதிர்பார்ப்பது பக்தி மட்டுமே. * பிறரிடம் உள்ள குற்றத்தையே சிந்தித்தால் குற்றவாளி ஆவாய். * எந்தளவுக்கு பற்று குறைகிறதோ, அந்தளவுக்கு நிம்மதி.* மனதில் துாய்மை இருந்தால் அது பார்வையில் வெளிப்படும்.* ஆன்மிகத்தில் சாதனை படைக்க இளமைக்காலமே ஏற்றது.* நம்பிக்கையுடன் பாடுபட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும். * யாரையும், எந்த வேலையையும் துச்சமாக கருதக் கூடாது. * பிரச்னைக்கு காரணம் பணமே.* பாவம் செய்யத் துாண்டுகிறது பணம்.* நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள். * துறவு மனப்பான்மை இல்லாவிட்டால் பணத்தின் மீதுள்ள மயக்கம் தீராது. * மனதை துாய்மைபடுத்தும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு உண்டு. * கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் பொய்.ஊக்கப்படுத்துகிறார் சாரதாதேவியார்