உள்ளூர் செய்திகள்

மனநிம்மதி வேணுமா...

* எப்போதும் கடவுளை நினை. மனம் நிம்மதியாக இருக்கும். * பெரியவர்களை அலட்சியப்படுத்தாதே. அவர்களின் அனுபவமே நமக்கு சொத்து.* இப்பிறவியில் செய்யும் நன்மையை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.* நியாயமற்ற வழியில் சேர்த்த பணம் பயன் தராது. * அறிவை மேம்படுத்த நல்ல புத்தகங்களை படி. * நீ செய்த தர்மம் உன்னை எப்போதும் பின்தொடரும். * துன்பம் வரும்போதுதான் உண்மையானவர்களை தெரிந்து கொள்ள முடியும். * எல்லாம் தெரிந்தவரும் இல்லை. எதுவுமே தெரியாதவரும் இல்லை.* நல்ல மனமே கடவுள் வாழும் இடம். மனதை துாய்மையாக வைத்திரு. * கடவுளை அன்பினால் வணங்கு. அப்போதுதான் அவரது அருள் கிடைக்கும். * மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் பழகு. * மானம் காக்க ஆடையும், மனதை காக்க வழிபாடும் அவசியம்.* உனது செயல்பாடு குடும்பத்துக்கு மட்டுமல்ல. நாட்டுக்கும் பயன்தர வேண்டும். * பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை. முதலில் அவர்களை வணங்கு. * அனுபவத்தால் கிடைக்கும் அறிவே மேலானது. * எந்தவொரு செயலையும் பதறாமல் செய். அப்போது அதன் சூட்சமம் புலப்படும்.கேட்கிறார் வாரியார்