காலம் மாறும் தர்மம் மாறுமா...
* காலங்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் பின்பற்றும் அடிப்படை தர்மங்களான பக்தி, ஒழுக்கம், நீதி, நியாயம் போன்றவை எப்போதும் மாறாதவை. * கோயிலுக்கு நிலங்களை தானம் அளித்தால் அந்த புண்ணியம் தலைமுறைக்கும் தொடரும்.* தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்தால் அந்த தர்மமே ஒருவனைக் காப்பாற்றும். தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்து வருவான். * பெண்கள் எங்கு நிம்மதியுடன் வாழ்கிறார்களோ அந்த நாடே பாதுகாப்பாக இருக்கிறது என்பது பொருள். * ஆதிசங்கரரின் அத்வைத கோட்பாடும், அவரது படைப்புகளும் நம் நாட்டின் ஒற்றுமைக்கு துணை புரிகின்றன. மொழி பாகுபாடு இல்லாமல் அனைவரும் அவரது ஸ்தோத்திரங்களைப் பாடி கடவுளை வழிபடுகின்றனர்.* தான் வளர்வதோடு சமுதாயத்தையும் வளர்ப்பதில் மனிதன் விருப்பம் கொண்டிருக்க வேண்டும். * பாரத தர்மம், பாரம்பரியம், குடும்பம், கிராமம் போன்ற அடிப்படை விஷயங்களை போற்றினால் நம் சம்பிரதாயம், நம் நாடு என்றென்றும் நிலைக்கும். கேட்கிறார் விஜயேந்திரர்