பெண்கள் நம் கண்கள்
UPDATED : செப் 29, 2017 | ADDED : செப் 29, 2017
* பெண்கள் நம் கண்கள். சமூக கவுரவத்தின் அடையாளமாக திகழும் அவர்களை காப்பது நம் கடமை. * எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறரது பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே சிறந்த மனிதன். * விரோத மனப்பான்மை இல்லாதவன் எதைச் செய்தாலும் அது தடையின்றி நிறைவேறும். * பிறருக்குப் போதிப்பதை விட, தன்னைப் பண்படுத்த முயற்சிப்பதே நற்பண்பு. * நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். * பிறப்பால் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். அனைவரும் ஒரே குலம். நம் அனைவரின் உடலிலும் ஓடுவது சிவப்பு ரத்தமே.* நல்லெண்ணம், அன்பு, நேர்மை, மனத்தூய்மை, கருணை ஆகிய நற்குணங்கள் வாழ்விற்கு அவசியமானவை. * பிறர் மீது நூறு குறைகளை சொல்வது எளிது. ஆனால், நம்முடைய ஒரு குறையைப் போக்குவது கடினமானது. அறிவுறுத்துகிறார் புத்தர்