பார்த்தால் பரவசம்
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
கடவுளை ஒளிவடிவில் வழிபடுவது ஞானிகளின் மனநிலை. ஆனால் சாதாரண மனிதர்களால் அப்படி வழிபட முடியாது என்பதால் தான் மகாவிஷ்ணுவே பூமியில் கிருஷ்ணராக அவதரித்தார் மதுசூதன சரஸ்வதி என்னும் அருளாளர் கிருஷ்ணர் மீது பாடிய நுால் ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம். இதில், ''ஞானிகள் மனதை அடக்கி தங்களுக்குள் ஜோதி வடிவில் கடவுளை தரிசிப்பர். அதற்காக மற்றவர்கள் தவம் செய்ய முடியவில்லையே என வருந்த தேவையில்லை. அந்த ஜோதியே நீலமேனியுடன் கார்மேக வண்ணனாக கிருஷ்ணராக யமுனா நதிக்கரையில் ஓடி விளையாடியது. அவரை பார்த்தாலே மனம் பரவசப்படும். நலமான வாழ்வும், மோட்சமும் உண்டாகும்'' என்கிறார்.