உள்ளூர் செய்திகள்

முன்னோடி

வெற்றியை வெளிப்படுத்த இரு விரல்களை அரசியல்வாதிகள் காட்டுவர். இதற்கு முன்னோடியாக இருப்பவர் மகாவிஷ்ணு தான். வாமன அவதாரத்தில் தன் திருவடியால் உலகை அளந்த போது, ''மகாபலி! இரண்டடி நிலம் கொடுத்து விட்டாய். மூன்றாவது அடி எங்கே?'' எனக் கேட்டார். காஞ்சிபுரம் அருள்புரியும் உலகளந்த பெருமாள் இடது கையில் இரு விரல்களை காட்டியபடி காட்சி தருகிறார்.