பக்தியை பரப்பியவர்
UPDATED : செப் 23, 2024 | ADDED : செப் 23, 2024
ஆந்திராவில் கடப்பா மாவட்டம் தளபாகம் என்னும் கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். பசியால் வாடிய இவருக்கு பத்மாவதி தாயாரே நேரில் காட்சியளித்து உணவளித்தார். தன் 16வயது முதல் 80 ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் 32,000 பாடல்களை பாடி மக்களிடையே பக்தியை பரப்பினார். தெலுங்கில் உள்ள இவரது பாடல்கள் செப்பு தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.