பாலாஜி இருக்க பயமேன்
UPDATED : செப் 27, 2024 | ADDED : செப் 27, 2024
திருப்பதி ஏழுமலையானின் வலதுகை அவரது திருவடியை காட்டியபடி கீழ்நோக்கி இருக்கும். 'பாலாஜி இருக்க பயமேன்' என்பதை இதன் மூலம் அவர் உணர்த்துகிறார். பெருமாளின் திருவடியைச் சரணடைந்தால் மட்டுமே பிறவி என்னும் கடலை நம்மால் கடக்க முடியும்.நவக்கிரகங்கள் ஒன்பதும் அவரது திருவடியில் காத்து கிடப்பதாக வெங்கடேச சுப்ரபாதம் கூறுகிறது. அவரது உத்தரவுப்படியே கிரகங்கள் செயல்பட்டு நன்மை, தீமையை உண்டாக்குகின்றன. கிரக தோஷத்தில் இருந்து தப்பிக்க ஏழுமலையானின் திருவடியைச் சரணடைவதே வழி.