உள்ளூர் செய்திகள்

பந்தியில் சாப்பிடப் போறீங்களா...

பலரும் சேர்ந்து உண்பதற்கு 'பந்தி' என்று பெயர். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? 'பங்க்தி' என்னும் சொல்லே தமிழில் 'பந்தி' என்றானது. 'பங்க்தி' என்றால் 'சேர்ந்து உண்ணுதல்'. மனத்துாய்மையான ஒருவர் பந்தியில் இருந்தால் போதும். அங்கு பரிமாறும் உணவு முழுவதும் பரிசுத்தமாகி விடும். அப்படிப்பட்ட நபரை 'பங்க்தி பாவனர்' என்று சொல்வர். நம்முடன் சேர்ந்து உண்பவரின் குணமும் உணவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஆன்மிகம்.