குருசுவாமிக்கு தகுதி
UPDATED : நவ 14, 2024 | ADDED : நவ 14, 2024
சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்து 18 முறை சென்றவர்கள் குருசுவாமி எனப்படுவர். ஒரே ஆண்டில் 18 முறை சென்று விட்டு குருசுவாமி எனக் கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்றவர்களே இத்தகுதியைப் பெறுவர். இவர்கள் குருசுவாமியாக இருந்து மற்ற பக்தர்களுக்கு மாலை அணிவிக்கலாம். சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் இவர்கள் ஐயப்பனுக்கு நித்யபூஜை செய்வது அவசியம்.