மரண பயம் விலக...
UPDATED : அக் 07, 2025 | ADDED : அக் 07, 2025
மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் பூமியில் வாழலாம். ஆனால் நிலையில்லாத வாழ்வை உணர்ந்து தினமும் நெற்றியில் திருநீறு பூச வேண்டும். 'சிவாயநம' என்னும் மந்திரம் ஜபிக்க வேண்டும். 'சிவாய நம என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை' என்கிறார் அவ்வையார். பசுஞ்சாணத்தால் கிடைத்த சாம்பல் தான் விபூதி. இதைப் பூசும் போதும் ''என்றாவது ஒருநாள் சாம்பலாக போகும் நான், சம்பாதித்த பணத்தில் பிறருக்கு உதவி செய்ய அருள்புரிவாயாக'' என அன்றாடம் அரை நிமிடம் பிரார்த்திக்க வேண்டும். இதனால் மரண பயம் விலகும். நிம்மதியான இறுதிக்காலம் அமையும்.