உள்ளூர் செய்திகள்

ஏழடி வைத்தால்...

திருமணம் முடிந்ததும் அம்மி மிதிக்கும் சடங்கின் போது, மணமகள் ஏழடி எடுத்து வைப்பாள். இது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு பண்புகளைக் குறிக்கும். 1. விருந்தினரை உபசரித்தல். 2. மனம், உடல் நலம் பேணுதல். 3. விளக்கேற்றி வழிபாடு செய்தல்.4. குடும்ப நிம்மதிக்கு வழிவகுத்தல். 5. புத்திசாலியாக செயல்படுதல்.6. இன்ப, துன்பத்தில் விட்டுக்கொடுத்தல். 7. தானம், தர்மம் செய்தல்.