ஆடுகின்றாரடி தில்லையிலே!
UPDATED : டிச 19, 2021 | ADDED : டிச 19, 2021
அம்பலம் என்பதற்கு திறந்தவெளி என பொருள். அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் எனப்பட்டார். தில்லைவனத்தில் ஆடியதால் தில்லையம்பலத்தான் என்றும். பொன் வேய்ந்த அம்பலத்தில் ஆடியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பலக் கூத்தன், அம்பலத்தரசன் என்றும் இவருக்கு பெயருண்டு.