உள்ளூர் செய்திகள்

பாவை பாடினால் பலன்

தன்னை கண்ணனின் காதலியரில் ஒருத்தியான நப்பின்னையாகவும், தன் தோழிகளை ஆயர்பாடி பெண்களாகவும், ஸ்ரீவில்லிபுத்துாரை கோகுலமாகவும் கருதினாள் ஆண்டாள். இதன் அடிப்படையில் பாடிய பாடல்களே திருப்பாவை. இதைப் பாடுவோருக்கு கைமேல் பலன் கிடைக்கும்.திருப்பாவை என்பது உடல், மனதிற்கு சுகம் தரும் சாதாரண விஷயம் அல்ல. எவ்வளவு சுகத்தை பூமியில் அனுபவித்தாலும், என்றாவது ஒருநாள் மனிதன் பூமியை விட்டு போகத் தானே வேண்டும். அப்போது ஆண்டாளின் திருப்பாவை துணைநிற்கும். ஆத்ம பலத்தை கொடுக்கும். ஒருவருக்கு ஆத்மபலம் கிடைத்து விட்டால் எல்லாம் கிடைத்தது போலத்தான்.