விதி இருந்தாலும் மதியும் வேணும்!
UPDATED : ஜூலை 08, 2011 | ADDED : ஜூலை 08, 2011
ஒரு பணக்காரர் கார் வாங்கினார். அவருக்கு கார் ஓட்டத்தெரியும் என்றாலும், ஒரு டிவைரை பணிக்கு வைத்துக் கொண்டார். அனுபவமிக்க டிரைவரால் விபத்து ஏற்படாது என்பது அவரது கணிப்பு. இதுபோல, விதியை மதியால் வெல்ல கற்றுக் கொள்ள வேண்டும். நமது செயல்களுக்கேற்றபடியே விதி அமைகிறது. விதி என்று விட்டு விட்டால்,நமது வாழ்க்கைப் பயணம் நாசமாகி விடும். வாழ்க்கை நல்லவழியில் செல்ல நமது கர்மபலனாகிய விதியை புத்தியால் வழிநடத்த வாழ்க்கை சீராகச் செல்லும் என்கிறார்கள்மகான்கள்.