வேண்டும் வெள்ளை மனசு
UPDATED : அக் 29, 2020 | ADDED : அக் 29, 2020
மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் அருகில் திரியம்பக் என்னும் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் அன்னத்தின் மீதமர்ந்த நான்கு கைகள் உடைய சரஸ்வதி சிற்பம் உள்ளது. அருகில் இரு சேவகர்கள் வெண்சாமரம் வீசியபடி நிற்கின்றனர். வாகனமான அன்னப்பறவை வெள்ளை நிறம் கொண்டது. சரஸ்வதியும் வெள்ளைப் புடவையே அணிந்திருக்கிறாள். கல்வியாளர்கள் வெள்ளை மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த வெள்ளைநிறம் உணர்த்துகிறது.