ஓடும்... ஆனா திரும்பாது!
UPDATED : ஜூலை 15, 2011 | ADDED : ஜூலை 15, 2011
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில், 'பெயரைச் சொன்னாலே போதும்' என்ற சிறப்பு பெற்ற அவதாரம் ராமாவதாரம். 'ராம்' என்ற இரண்டெழுத்தை ஜெபிக்கும்போது, 'ரா' என்று வாயைத் திறந்தால் நம்மிடம் இருக்கும் பாவச்சுமை ஓடிவிடும். இரண்டாம் எழுத்தான 'ம்' என்று ஜெபித்து வாயை மூடும்போது, வெளியே சென்ற பாவம் நம்மை வந்து தீண்டுவதில்லை. சொல்வதற்கு எளிமையான ராமநாமத்தை எந்த இடத்திலும் சொல்லலாம். தர்மசிந்தனையே இல்லாமல் வாழும் கொடிய பாவிகள் கூட, ராமநாமத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் நற்கதி அடைவது உறுதி என்பது அருளாளர்களின் கருத்து.