உள்ளூர் செய்திகள்

குட்டுவதற்குரிய ஸ்லோகம்

விநாயகரை வணங்கும் போது, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். அப்படி குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் மிகவும் இலகுவானது. நீங்கள் அடிக்கடி கோயில்களிலும், வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்தும்போது, அர்ச்சகர்கள் சொல்லி நாம் கேட்பது. இதோ, அந்த ஸ்லோகம்.''சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்!ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!''இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் போது, 'சுக்லாம்பரதரம்' துவங்கி 'ப்ரஸந்ந வதநம்' வரையான ஐந்து சொற்கள் வரை தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகம் விநாயகருக்கு ரொம்பவும் பிடிக்கும். இதைச் சொன்னால், நாம் துவங்கும் செயல்கள் தங்குதடையின்றி நடக்கும்.