தெற்கு நோக்கிய அம்மன்
UPDATED : ஜூலை 14, 2016 | ADDED : ஜூலை 14, 2016
துர்க்கை பெரும்பாலும் வடக்கு நோக்கியே கோவில்களில் காட்சி தருவாள். ஆனால் திருவாரூர் மாவட்டம் ஆந்தக்குடியில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் துர்க்கை தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பான அம்சமாகும். மரணபயம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட்டு அருள் பெறுகின்றனர். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் கூட இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.