உள்ளூர் செய்திகள்

படைவீடு ஒன்று; கோயில் இரண்டு

முருகனின் ஆறு படை வீடுகளில் பழநி மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. மற்ற படை வீடுகளில் ஒரு கோயில் இருக்க, பழநியில் மட்டும் இரண்டு கோயில்கள் உள்ளன. அடிவாரத்தில் உள்ள கோயில் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் பாடியுள்ளார். இதை 'ஆதி கோயில்' என்பர். மலை மீதுள்ள கோயில் முருகனை திருப்புகழில் அருணகிரிநாதர் வர்ணிக்கிறார். 'அதிசயம் அநேகமுற்ற பழநி' என்று சொல்வதில் இருந்து, பழநி முருகனின் பெருமையை அறியலாம்.