இரண்டு அன்னங்கள்
UPDATED : அக் 28, 2012 | ADDED : அக் 28, 2012
மனிதனுக்கு இரண்டு விதமான அன்னங்கள் தேவை என்கின்றனர் ஞானிகள். முதல் அன்னம் நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். பசியைப் போக்கும் சாப்பாடு. இரண்டாவது வகை நம் உயிருக்கு தேவையானது. அதுவே பரம்பொருள்(கடவுள்) என்னும் அன்னம். சாப்பாட்டை மட்டும் உட்கொண்டு உலகவிஷயங்களில் ஈடுபடுவதை இறைவனே விரும்புவதில்லை. தன்னையும் 'பக்தி' என்னும் கை கொண்டு உண்டு வந்தால் (வணங்கினால்) நமக்குள் பரிசுத்தத்தை ஏற்படுத்துவான். இதன் மூலம் ஆத்ம அபிவிருத்தி ஏற்படும்.