சுப்ரபாதம் எழுதியவர் யார்
UPDATED : செப் 30, 2020 | ADDED : செப் 30, 2020
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கும். அப்போது பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவரால் எழுதப்பட்ட சுப்ரபாதத்தை கேட்டபடி துயில் எழுகிறார். இதில் வெங்கடேச ஸ்தோத்திரம், வெங்கடேச பிரபத்தி, மங்களாசாசனம் இடம் பெற்றிருக்கும். பசும்பால், வெண்ணெய், சர்க்கரை கலந்த நைவேத்யம் படைத்து தீபாராதனை அப்போது நடக்கும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர்.