கருணை காட்டுங்கள்
UPDATED : ஜன 26, 2016 | ADDED : ஜன 26, 2016
* நெஞ்சில் கருணை இருந்தால் ஒழிய கடவுளின் அருளுக்கு யாரும் பாத்திரமாக முடியாது.* அறிவிலும் செயலிலும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும்.* அகங்காரம் என்னும் அசுரனுக்கு ஆளாகி விட்டால் நரகத் துன்பத்தை அனுபவிக்கும் நிலை உண்டாகும். * கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.* தெய்வம் அறிவுக் கடலாக உள்ளது. அக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.-பாரதியார்