உள்ளூர் செய்திகள்

சுயபுத்தியுடன் நடந்து கொள்!

* துணிவே தாய். அதிலிருந்து தான் கல்வி முதலிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நன்மைகளும் பிறக்கின்றன.* அனைத்து மனிதர்களுக்கும் மனவலிமையுடன் இறைவன் அருள்பாலிக்கிறான். அவனை வணங்கினால் எண்ணியது அனைத்தும் நடக்கும்.* முயற்சியின் துவக்கத்தில் பலர் உதவுவதில்லை. நம்பிக்கையை கைவிடாமல் இருந்தால், காலப்போக்கில் வெளியுதவிகள் தாமே வரும், ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை.* தெய்வத்திடம் உண்மையுடன் பிரார்த்திக்க வேண்டும்.* செல்வம் தேடுவது நியாயமாக இருந்தாலும், அவரவர் தகுதிக்கேற்ற வழிகளில் செல்வம் தேட வேண்டும்.* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாதவன் பிறரைத் திருத்துவதற்கு அருகதை இல்லாதவன்.* விளக்கிருந்தாலும் கண் வேண்டும். நான்கு பேர் துணையிருந்தாலும் தனக்கென சுயபுத்தி வேண்டும். குறிப்பாக, பெண்கள் சுயபுத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.- பாரதியார்