பயனுள்ள பணி செய்யுங்கள்
UPDATED : மார் 21, 2013 | ADDED : மார் 21, 2013
* எந்த தொழிலையும் நேர்த்தியாகவும், நியாயமாகவும் செய்து பொருள் தேடுபவர்கள் மேன்மக்கள்.* உள்ளத்திலே நேர்மையும் தைரியமும் இருந்தால் வாழ்வும் நேரான பாதையில் சென்று கொண்டிருக்கும்.* நம்முடைய இஷ்டப்படி உலகில் ஒன்றும் நடப்பது இல்லை. எல்லாம் தெய்வத்தின் இஷ்டப்படி தான் நடக்கிறது.* கடவுளுக்கு எல்லாம் ஒன்றே. எத்தனை கோடி உயிர்கள் உலகில் வாழ்ந்தாலும் சரி மடிந்தாலும் சரி கடவுளுக்கு எந்தவொரு பேதமும் இல்லை. * கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற உறுதி உள்ளத்தில் நிலைத்திருக்க வேண்டும். அது தான் உண்மையான பக்தி.* மனிதன் அரைநிமிஷம் கூட சும்மா இருப்பது கூடாது. ஏதாவது பயனுள்ள வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.* எதை விரும்புகிறோமோ அதுவே நமக்கு கிடைக்கிறது. எதை ஆதரிக்கிறோமோ அதுவே வளர்ச்சி பெறுகிறது.பாரதியார்