யாருக்கும் பயப்படாதே!
UPDATED : மே 09, 2013 | ADDED : மே 09, 2013
* தனக்கு கிடைக்காது என்று தெரியும் பொருளை விரும்பக்கூடாது. வீண் ஆசையால் மனமும், உடலும் பாழாகி விடும்.* பெண்ணை அடிமையாகக் கருதக்கூடாது. அதனால் தான் முற்கால தமிழர்கள் மனைவியை 'வாழ்க்கைத்துணை' என்று அழைத்தனர்.* சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண் உயராவிட்டால் ஆண் உயர முடியாது.* பெரிய பெரிய துன்பங்களை அடைந்த பிறகு தான், மனிதனுக்கு சிறிய உண்மைகள் புலப்பட ஆரம்பிக்கின்றன.* முகஸ்துதி செய்பவன், பொய்யாக நடிப்பவன் ஆகியோரைத் தலையில் வைத்துக் கொண்டாடக் கூடாது.* யாருக்கும் பயந்து கொண்டு நமக்குத் தோன்றுகின்ற உண்மைகளை மறைக்கக் கூடாது. * வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையும் உண்மையும் நம்மோடு இருக்கட்டும்.- பாரதியார்