உள்ளூர் செய்திகள்

இறுதிவரைக்கும் போராடு!

* தம்பதிகள் சிவன்- பார்வதி போலவும், விஷ்ணு- லட்சுமி போலவும் வாழ வேண்டும். மனைவி மனம் நோகும்படி பேசக்கூடாது.* தெய்வத்தன்மை எளிதில் ஏற்படுவதற்கு மனதில் பயம், கபடம், பகை இல்லாத தூய எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* இறைவன் மீது பாரத்தைப்போட்டுவிட்டு வாழ்ந்தால் இறைவன் தன் அருளைத் தருகிறார். இவர்களுக்கு கிடைக்கும் பயன் உலகத்தார் வியக்கும்படியாக இருக்கும்.* வாழ்க்கையில் ஒரு முயற்சியை எடுத்துக் கொண்டால் வெற்றி உண்டாகும் வரை, கண்ணும் கருத்துமாக பாடுபட வேண்டும்.* அறிவுத் தெளிவைத் தவறவிடாமல், ஓயாமல் தொழில் செய்து கொண்டிருந்தால் அது நல்லதாக முடியும்.* தெய்வத்தை நம்பிவிட்டு நாம் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்தால் தெய்வமும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கும்.- பாரதியார்