உள்ளூர் செய்திகள்

உயிர்களிடம் கருணை காட்டு!

* நடந்ததையே எண்ணிக் குமைய வேண்டாம். இனி நடக்க வேண்டிய விஷயத்தில் கருத்தைச் செலுத்துங்கள். * கல்லில் மட்டுமே தெய்வம் இருக்கிறது என்று எண்ணாதே. எல்லா உயிர்களிடமும் தெய்வம் இருக்கிறது * மக்கள் கூட்டாக சேர்ந்து வணங்கும்போது, மனிதமனம் ஒருமைப்படுகிறது. அதற்காகவே கோயில்களை முன்னோர் ஏற்படுத்தினர்.* பிறரை அடிமையாக நடத்த விரும்புபவர்களிடம் தெய்வாம்சம் உண்டாகாது. அனைவரையும் நேசித்து வாழ்வதே தெய்வீகம். * உலகம் நியாயவழியில் நடக்கவில்லை என்பதற்காக, நாம் மட்டும் ஏன் நியாயத்தைப் பின்பற்ற வேண்டும் என்று விபரீதமாக சிந்திக்கக் கூடாது.* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். எத்தனை காலம் மோசக்காரன் தன் செயல்களை மூடி வைத்து மறைக்க முடியும்? ஒருநாள் வெளிப்பட்டு விடும்.* காகம், குருவி, புழு, எறும்பு ஆகிய சிற்றுயிர்களுக்கும் நாம் தீங்கு செய்வது கூடாது. எல்லா உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும். - பாரதியார்