அறிவே தெய்வம்
UPDATED : டிச 30, 2014 | ADDED : டிச 30, 2014
* ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைய வேண்டாம். அறிவு ஒன்றே தெய்வம் என்பதை உணருங்கள். * பிறர் நலத்திற்காக வேண்டுவதே மேலான பிரார்த்தனை. அதுவே நம் கடமை. * காவித்துணி, கற்றைச் சடை மட்டுமே கடவுளை அடைய உதவாது. அன்பிருக்கும் இடமே ஆண்டவன் இருக்குமிடம்.* இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம் என அவரே எல்லாமுமாக இருக்கிறார்.* கடவுள் ஒருவரே. ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்கள் அனைத்தும் அவரின் வடிவங்களே. - பாரதியார்