உள்ளூர் செய்திகள்

நாட்டில் பக்தியை வளர்ப்போம்

* மனம் ஒரு கண்ணாடி. அது அம்பாளை ஓயாமல் தியானம் செய்யட்டும். அம்பாளின் பார்வை படும் மனதில் அன்பும், துணிச்சலும் பிறக்கும்.* பக்தி செலுத்துவதற்கு பொருளும் வேண்டாம், படிப்பும் வேண்டாம். இது இரண்டும் இல்லாமலேயே சிவபதத்தை அடைந்து முக்தி பெறலாம். * உனக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் தரும் வகையில் செய்யும் செயல்களே பாவம். இன்பம் விளைவிக்கத்தக்க செயலே புண்ணியம்.* பிறர் சொத்தை அபகரிக்க வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவ்வாறு நினைத்த மாத்திரத்திலேயே, அவன் திருடனாகி விடுகிறான். இந்தத் திருடர்களுக்கு இங்கு தண்டனை கிடைக்காமல் போகலாம். ஆனால், ஆண்டவன் இவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டான்.* நமது மகான்களின் வரலாறை இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். பக்தியை வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை.- பாரதியார்