உள்ளூர் செய்திகள்

உயிர்களிடம் அன்பு காட்டுங்கள்

* உயிர்களிடம் அன்பு காட்டுங்கள். அன்பே இன்பத்திற்கான ஊற்று.* மனம் உற்சாகமாக இருக்க வேண்டும். உழைப்பில் ஈடுபட்டு உடலையும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யுங்கள்.* அறிவு தான் ராஜா. அதைப் பெறுவதற்கு மனம், ஐம்புலன்கள் அடங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.* துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை பிடித்து நிறுத்துங்கள்.* சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். ஆனால், அதன்படி நடந்து கொள்வது மிகவும் கடினமானது.-பாரதியார்