துணிச்சலுடன் மனதைக் கட்டுங்க!
UPDATED : ஜூலை 23, 2012 | ADDED : ஜூலை 23, 2012
* ஒரு செயலைத் தொடங்கும்போது நமக்கு நாமே துணை. தொடக்கத்தில் நம்மை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நம்பிக்கையை விடாமல் பின்பற்றினால் நாளடைவில் உதவிகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கும்.* துன்பம் நேரும்போது, துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி.* உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை ஒருநிலைப்படுத்துவதே பயனுடையது.* வீட்டிலே தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தை அடைந்து, குகையில் அமர்ந்தாலும் கடவுள் தரிசனம் பெற முடியாது.* பக்தி அதிகரித்தால் மனோபலம் உண்டாகும். அவன் இந்த பிறப்பிலேயே தெய்வநிலை அடைவான். * கேட்டவுடன் உலகில் எதுவும் கிடைப்பதில்லை. பக்திக்கும் இது பொருந்தும். பக்குவமடைந்த பிறகே கேட்டவரம் கிடைக்கும்.- பாரதியார்