உள்ளூர் செய்திகள்

தாய்க்கு நிகர் தாரம்

* தாய் விஷயத்தில் ஒருவன் காட்டும் உண்மையையும், செலுத்தும் பக்தியையும் தன் மனைவியிடத்திலும் செலுத்த வேண்டும்.*ஒவ்வொரு நிமிடமும் சத்தியம் பேசுவதுடன், இறைவனை அறிய முயற்சிப்பவனே மனிதனென்றும், கடவுளென்றும் கூறுவதற்கு தகுதியானவன்.*நம்பிக்கை உண்டானால் வெற்றியுண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி.* தெய்வத்தை நம்பி, எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும் என்பதால், அனைத்து செயலிலும் முயற்சி கண்டிப்பாக தேவை.* மனிதன் தன் உள்ளத்தை தெய்வத்துக்கு கொடுப்பதே யாகம். அந்த யாகத்தை செய்பவருக்கு தெய்வ வலிமை, விடுதலை, செல்வம், ஆயுள், புகழ் ஆகிய அனைத்து மேன்மைகளும் கிடைக்கும்.* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை, அந்தசொல், உள்ளத் துணிவை உணர்த்தினால் அதற்கு மகிமைஉள்ளது.* மனிதன் செல்வம் தேடுவதற்குப் பல வழிகளில் செல்வது நியாயம் தான், ஆனால், தகுதியான நல்ல வழிகளில் செல்ல வேண்டும். -பாரதியார்