உள்ளூர் செய்திகள்

உண்மை மட்டுமே பேசுங்கள்

* எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுங்கள். அதனால் பிறவித்தளையில் இருந்து நீங்கி விடுதலை காண்பீர்கள்.* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமற்றவர்களிடம் மட்டும் தான் காணப்படும். தான் செய்த குற்றத்தை மறப்பதும், மறைப்பதும் மூடனின் செயல்.* குடும்பத்தில் ஒழுங்கில்லாவிட்டால் நாட்டிலும் ஒழுங்கு இருக்காது. * எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. மனிதனின் எண்ணத்தை மீறியும் காலசக்தி வேலை செய்வதுண்டு.* எந்த இடத்திலும் உண்மை பேசுங்கள். பிறர் சொல்லும் உண்மைகளை விருப்பத்தோடு கேளுங்கள்.* பெண்ணுக்கு கற்பு மிகச் சிறந்த கடமை. அதைக் காக்கும் பொருட்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தகும்.*குழந்தைகளுக்கு வெறும் கல்வியறிவு மட்டுமே போதாது. ஆரோக்கியமும் மிக அவசியமானது. - பாரதியார்