சாந்தமாகப் பேசுங்கள்
* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைகளால் மனதை நிரப்பி தியானம் செய்யுங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கும்.* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். * கோபத்தை வளர்த்துக் கொள்பவன் தன்னைத் தானே தீயால் சுட்டுக் கொள்கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்களிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினாலும் கூட, மறுபடியும் நழுவி வீழ்ச்சியடையக் கூடும். அதனால் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.* விஷ ஜந்து, பூச்சிகளால் மனிதன் சாவதில்லை. நோய்நொடிகளாலும் அவனுக்கு அழிவில்லை. கவலையால் தான் முடிவைத் தேடிக் கொள்கிறான். * எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் போதிக்கின்றன. ஆனால், உலகில் உள்ள எல்லோருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.- பாரதியார்