உடல்நலன் பேணுங்கள்
UPDATED : ஜூன் 21, 2015 | ADDED : ஜூன் 21, 2015
* இயற்கையும் கடவுளும் வேறானதல்ல. உலகமே அவரின் உடம்பாக இருக்கிறது.* நம் விருப்பப்படி உலகம் நடப்பதில்லை. கடவுளின் இஷ்டப்படியே இயங்குகிறது. * வாழ்வில் பெரிய கஷ்டங்களை அடைந்த பிறகே, சிறிய உண்மைகள் புலப்படும்.* யாருக்கும் பயந்து நமக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது. * உடல் வலிமையுடன் இருக்க விரும்பினால், மனதை வலிமை உடையதாக வைத்திருங்கள்.* உடல்நலனைப் பேணுங்கள். ஆரோக்கியம் வசப்படா விட்டால், உலக வாழ்வு துன்பமயமாகி விடும்.-பாரதியார்