காலத்தின் அருமை
UPDATED : ஜூன் 11, 2015 | ADDED : ஜூன் 11, 2015
* நேர்மையும், துணிச்சலும் இருந்தால் தான் நேரான பாதையில் செல்ல முடியும். * எல்லா மனித முயற்சியிலும் ஆரம்பத்தில் தவறு ஏற்படுவது இயல்பானதே. * எல்லாத் தொழிலும் கடவுளுக்கு உகந்தது. சோம்பல் ஒன்றே மிக இழிவானது. * பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ எந்தச் செயலும் வெற்றி பெறாது. * காலம் பணத்தைப் போல விலை மதிப்பு கொண்டது. ஒருபோதும் பொழுதை வீணாகக் கழிப்பது கூடாது.* உதவும் மனப்பான்மை இல்லாவிட்டால், பக்தி என்பது பகல் வேஷமாகி விடும். -பாரதியார்