உள்ளூர் செய்திகள்

கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்

* அனைவரும் ஒருமனப்பட்டிருப்பதுடன், இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருக்க வேண்டும்.* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள் இப்போது கடவுளோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.* கடவுள் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு. அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் ஆய்ந்தறியும்.* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை. சிந்தனை செய்வதுமில்லை.* என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.* சிறிது காலத்துன்பங்களுக்குப் பின் கடவுள் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி, நிலை நிறுத்துவார்.* வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்- பைபிள்