உண்மையே வெற்றி தரும்
UPDATED : ஏப் 01, 2016 | ADDED : ஏப் 01, 2016
* தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. உனக்கு எதிலும் வெற்றியே உண்டாகும்.* கடமையைச் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பவனைக் காண்பது நமக்கு தீமையையே உண்டாக்கும்.* கொடுத்த வேலையைச் செய்யாமல் ஆதாயம் பெற முயல்பவன் பிச்சைக்காரனை விட கேவலமானவன்.* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.* பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.- பாரதியார்