உள்ளூர் செய்திகள்

உலகத்தின் தலைவன் யார்?

* மனிதன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு கொடுத்துவிட வேண்டும். அதுவே யாகமாகும். அந்த யாகத்தை நடத்துவோருக்குத் தெய்வம் அனைத்துவித மேன்மைகளையும் வழங்கும். * தன்னையே எரித்துக் கொண்டு சந்நிதியில் ஒளிபரப்பும் எண்ணெய் விளக்கைப் போல், ஆயுள் உள்ள வரை இறைவனின் சேவை செய்யும் அருங்குணம் தேவை என்பதை உணர்ந்தேன்.* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால், கடமையில் மனிதன் தவறிவிடுகிறான். அப்போது சாஸ்திரம் எனும் தீபமே ஒருவனுக்கு வழிகாட்டும்.* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு கடலுக்கு ஒப்பாகும்.* உலகம் முழுமைக்கும் ஈசனே தலைவனாக இருப்பதால், விதியின் முடிவுகளைத் தெய்வபக்தியால் வெல்ல முடியும். பக்தர்களுக்கு ஈசன் வசப்பட்டவன் என்பதால் பக்தன் எது கேட்டாலும் கை கூடுகிறது.* தெய்வநம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும், பிற மார்க்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் தியானம் அவசியமாகிறது.-பாரதியார்